Wednesday, March 30, 2011

[ Monday, 28-03-2011 14:25:31 ] []
[ Tuesday, 29-03-2011, 20:34:08 ] []
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ Wednesday, 30-03-2011 06:05:46 ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்ளை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ள அதேவேளை, இடதுசாரிகள் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, தம்மிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றார்.

[ Sunday, 27-03-2011 09:30:15 ]
பாரசீகக்குடாவில் கடந்த ஒரு வாரமாக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் கொதி நிலையை அடைந்துள்ளது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானைத் தாக்கி அணு உலைகளில் கசிவினை ஏற்படுத்தி இரண்டாம் உலக மகா யுத்த காலத்து ஹிரோசிமா, நாகசாகி அழிவுகளை நினைவுபடுத்துகின்றன.

வடக்கில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன கிரிக்கெட் வீரர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 01:42.01 AM GMT ]
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.

"பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்' என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனார் என்று கூறினார்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்குகிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உத




உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றி கடந்த சில மாதங்களாக சற்று விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 05:43.18 PM GMT ] [ வீரகேசரி ]
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

[ Tuesday, 29-03-2011 06:10:29 ]
இயற்கைக்கு சாதகமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.







http://www.lankasri.fm/